வேனில் மணல் கடத்தியவர் கைது

சாக்கோட்டை அருகே வேனில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-05-31 17:29 GMT
காரைக்குடி,

சாக்கோட்டை போலீஸ் சரகம் பானாவயல்-பிரம்புவயல் கிராமங்களுக்கு இடையே உள்ள சறுக்கு பாலம் அருகே சிலர் சரக்கு வாகனம் ஒன்றில் ஆற்று மணலை ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர்.அப்போது வேனின் பின் சக்கரம் கழன்று ஓடியது. இதனால் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் அப்படியே போட்டு விட்டு அங்கிருந்து தலைமறைவாயினர். இதுகுறித்த தகவல் கிடைத்த அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் நடந்த சம்பவம் குறித்து சாக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அண்ணாநகரை சேர்ந்த பிரகாஷ் (வயது 30) என்பவரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய வேனையும் மணலையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய சிலரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்