பள்ளி மாணவி மாயம்

பள்ளி மாணவி மாயம் ஆனார்

Update: 2021-05-31 17:49 GMT
கரூர்
கரூர் தாந்தோணிமலையை சேர்ந்தவர் அமுதா. இவரது மகள் சினேகா (வயது 17). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் அடைக்கப்பட்டுள்ளதால் சினேகா வீட்டில் இருந்து வந்தார். இந்தநிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இதையடுத்து அமுதா தனது மகளை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அமுதா கொடுத்த புகாரின்பேரில், தாந்தோணிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிந்து, மாயமான பள்ளி மாணவி சினேகாவை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்