கொரோனாவுக்கு பெண் உள்பட 2 பேர் பலி
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக பெண் உள்பட 2 பேர் இறந்தனர். மேலும் 181 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக பெண் உள்பட 2 பேர் இறந்தனர். மேலும் 181 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் குறைந்தது
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் வெளியே நடமாடுவதை குறைத்தனர். வெளிமாவட்டத்தில் இருந்து இ-பதிவு இல்லாமல் வந்த வாகனங்களையும், அனுமதியின்றி ஊர் சுற்றிய வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சுகாதார பணியாளர்களும், மருத்துவத்துறையினரும் விரைந்து செயல்பட்டதால் மாவட்டத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியது. நேற்று முன்தினம் 211 பேருக்கு கொரோனா ெதாற்று இருந்தது. அது மேலும் குறைந்து நேற்று 181 பேருக்கு புதிதாக தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
2 பேர் பலி
இதே போல் காரைக்குடி அமராவதிபுதூரில் 35 வயதான ஆண் ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.
152 பேர் குணம் அடைந்தனர்