காரைக்குடி பகுதியில் கிருமிநாசினி தெளிப்பு தீவிரம்
காரைக்குடி பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம் அடைந்தது.
காரைக்குடி,
காரைக்குடி நகராட்சி ஆணையாளர் லெட்சுமணன் தலைமையில் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் ரவிசங்கர், பாஸ்கரன், சுந்தர் ஆகியோர் மேற்பார்வையில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் வாகனங்களில் சென்று புதிய பஸ் நிலையம், செக்காலை சாலை, பழைய மருத்துவமனை பகுதி, ரெயில்வே பகுதி, கல்லூரி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.