நெல்லை டவுன் உதவி போலீஸ் கமிஷனர் இடமாற்றம்
நெல்லை டவுன் உதவி போலீஸ் கமிஷனர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
நெல்லை:
நெல்லை டவுன் போலீஸ் உதவி கமிஷனராக பணியாற்றி வருபவர் சதீஷ்குமார். இவர் கோயம்புத்தூர் மாநகர மத்திய பகுதி சட்டம்-ஒழுங்கு உதவி கமிஷனராக நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக டி.ஜி.பி. திரிபாதி பிறப்பித்து உள்ளார்.