ராமநாதபுரம் மாவட்டத்தில் 260 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.

260 பேருக்கு கொரோனா; 4 பேர் உயிரிழப்பு

Update: 2021-06-02 19:55 GMT
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 260 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கொரோனா தொற்று
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நிலையில் தற்போது படிப்படியாக தொற்று எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 260 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 
இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 17 ஆயிரத்து 290 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 221 பேர் வீடு திரும்பி உள்ளனர். 
4 பேர்  பலி 
இதுவரை 13 ஆயிரத்து 762 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 3 ஆயிரத்து 291 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 237 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 
இந்தநிலையில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்