சிறுமி மாயம்

சிறுமி மாயம் ஆனார்

Update: 2021-06-03 18:29 GMT
குளித்தலை
குளித்தலை அருகே உள்ள சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த சண்முகம். இவருடைய மகள் சுபலெட்சுமி (வயது 17). இவர் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று தனது பெற்றோருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சுபலெட்சுமியை காணவில்லை. இதையடுத்து சுபலெட்சுமியை அவரது பெற்றோர் உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சண்முகம் கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து மாயமான சுபலெட்சுமியை தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்