கள்ளச்சாராயம் விற்ற 4 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-04 20:27 GMT
திண்டுக்கல்: 

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள் தடையை மீறி கள்ளச்சாராயம் வாங்கி குடிப்பதாக ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து நகர் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். 
அப்போது வெள்ளமரத்துப்பட்டி பகுதியில் சந்தேகப்படும்படி கையில் கேனுடன் சுற்றித்திரிந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். 

அதில் அவர்கள் சேர்வைகாரன்பட்டியை சேர்ந்த பிரசாத் (வயது 34), சேகர் (35), வெள்ளமரத்துபட்டியை சேர்ந்த தனபாலன் (32), தேவகார்த்தி (19) என்பதும், அவர்கள் கள்ளச்சாராயம் விற்பதும் தெரியவந்தது. 


இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்