பெரம்பலூரில் பலத்த மழை

பெரம்பலூரில் பலத்த மழை பெய்தது.

Update: 2021-06-04 20:34 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் நகரில் கடந்த சில நாட்களாக பகலில் கடுமையான வெப்பநிலையும், மாலை நேரத்தில் இதமான தட்பவெப்ப நிலையும் நிலவி வருகிறது. நேற்று மாலை பெரம்பலூரில் பரவலான மழை பெய்தது. பெரம்பலூரை சுற்றியுள்ள கிராமங்களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்தது. பெரம்பலூர் நகர்ப்பகுதியில் நேற்று இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. பின்னர் சிறிது நேரம் மீண்டும் மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் மழை நீடித்தது. இதனால் நகர் பகுதிகளில் பூமி குளிர்ந்ததுடன், ஆழ்துளை கிணறுகளுக்கு செறிவூட்டும் வகையில் இருந்தது. இந்த மழை காரணமாக பெரம்பலூர் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி மற்றும் துறைமங்கலம் பெரிய ஏரிக்கு நீர்வரத்து ஏற்பட்டது.

மேலும் செய்திகள்