தடையை மீறியதாக 109 வாகன ஓட்டிகள் மீது வழக்கு

தடையை மீறியதாக 109 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2021-06-05 20:19 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்ட போலீசார் 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.
அந்த வகையில் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் போலீசார் 109 வழக்குகள் பதிவு செய்தனர். 108 இருசக்கர வாகனங்களும், 1 இலகுரக வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் முக கவசம் அணியாமல் வந்த 56 பேருக்கும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத ஒருவர் என ெமாத்தம் 57 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்