கருப்பு பூஞ்சை நோய்க்கு மளிகை கடைக்காரர் பலி
காரைக்குடியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மளிகை கடைக்காரர் பலியானார்.
காரைக்குடி, ஜூன்.7-
காரைக்குடி ரெயில்வே குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 63 வயது நபர் ஒருவர் அரசு மருத்துவமனை அருகே மளிகை கடை வைத்து இருந்தார். இவர் கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு பின் குணமடைந்த நிலையில் வீடு திரும்பினார். பின்னர் சில நாட்களில் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று இருப்பது உறுதியானது. அதன் பேரில் அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.