ஆலங்குளம் பகுதியில் பலத்த மழை

ஆலங்குளம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2021-06-07 19:54 GMT
ஆலங்குளம்,
ஆலங்குளம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 
பலத்த மழை 
ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை வெயில் அடித்தது. இந்தநிலையில் மதியத்திற்கு மேல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து மாைல 5 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நேரம் ஆக ஆக பலத்த மழையாக மாறியது. 
விவசாயிகள் மகிழ்ச்சி 
ஆலங்குளம், ராசாப்பட்டி, எம்.ஜி.ஆர். நகர், பெரியார் நகர், இருளப்ப நகர், அண்ணா நகர், கலைஞர் நகர், பாரதி நகர், வசந்த் நகர், அம்பேத்கர் நகர், இந்திரா நகர், சங்கரமூர்த்திபட்டி, சிமெண்டு ஆலை காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை பலத்த மழை பெய்தது. 
இந்த பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். தொடர் மழையினால் நிலத்தடி நீர் மட்டமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர். 

மேலும் செய்திகள்