திருச்சி மத்திய சிறை காவலர் கொரோனாவுக்கு பலி

திருச்சி மத்திய சிறை காவலர் கொரோனாவுக்கு பலியானார்.

Update: 2021-06-09 18:50 GMT
கே.கே.நகர்,
திருச்சி மத்திய சிறை காவலர் கொரோனாவுக்கு பலியானார்.

சிறை காவலர்

விருதுநகர் மாவட்டம் பாவலி சந்திரகிரிபுரத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 32). இவர் திருச்சி மத்திய சிறையில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தார். சிறை வளாகத்தில் உள்ள தெற்கு காவலர் குடியிருப்பில் மனைவி மற்றும் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். 

இந்த நிலையில் நாராயணசாமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீெரன மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சக காவலர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கொரோனாவுக்கு உயிரிழப்பு

கடந்த மாதம் 29-ந்தேதி மேற்கொள்ளப்பட்ட ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது உறுதியானது. இதையடுத்து அவருக்கு ஆக்சிஜன் பொருத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம்இரவு நாராயணசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதுவரை 10 பேர் பலி

திருச்சி மத்திய சிறையில் கைதிகள் மற்றும் காவலர்கள் தொடர்ச்சியாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் 213 சிறைக்காவலர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 

திருச்சியில் சிறைக்காவலர் நாராயணசாமி கொரோனாவுக்கு பலியான சம்பவம் சக காவலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்