சேலம் மாவட்டத்தில் 957 பேருக்கு கொரோனா பாதிப்பு 23 பேர் பலி

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 957 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 23 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Update: 2021-06-09 20:23 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 957 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 23 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
957 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 975 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 957 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 280 பேர், வீரபாண்டியில் 52 பேர், ஓமலூரில் 48 பேர், எடப்பாடியில் 44 பேர், சங்ககிரியில் 40 பேர், மகுடஞ்சாவடி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா 39 பேர், கெங்கவல்லியில் 37 பேர், சேலம் ஒன்றியத்தில் 36 பேர், வாழப்பாடியில் 35 பேர், தலைவாசலில் 32 பேர், ஆத்தூரில் 28 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 27 பேர், காடையாம்பட்டியில் 26 பேர், ஏற்காட்டில் 25 பேர், கொங்கணாபுரத்தில் 22 பேர், மேட்டூரில் 14 பேர், தாரமங்கலம், பனமரத்துப்பட்டி ஆகிய பகுதியில் தலா 12 பேர், நங்கவள்ளியில் 8 பேர், நரசிங்கபுரத்தில் 7 பேர், மேச்சேரியில் 3 பேர், கொளத்தூரில் ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
நாமக்கல், சென்னை
சேலம் மாவட்டத்திற்கு நாமக்கல்லில் இருந்து வந்த 26 பேர், சென்னையில் இருந்து வந்த 17 பேர், தர்மபுரியில் இருந்து வந்த 12 பேர், ஈரோட்டில் இருந்து  வந்த 11 பேர், காஞ்சீபுரத்தில் இருந்து வந்த 10 பேர், கள்ளக்குறிச்சியில் இருந்து வந்த 6 பேர், திருப்பூரில் இருந்து வந்த 5 பேர், திருவள்ளூரில் இருந்து வந்த 2 பேர், வேலூரில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 701 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,115 பேர் குணமடைந்துவிட்டதால் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். தொடர்ந்து 10 ஆயிரத்து 377 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
23 பேர் பலி
சேலத்தை சேர்ந்த 11 பெண்கள் உள்பட 23 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் அங்கு சிகிச்சை பலனின்றி 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,177 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்