சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் 8 பேர் பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் 8 பேர் பாதிக்கப்பட்டனர்.

Update: 2021-06-09 21:10 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு 74 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கு கருப்பு பூஞ்சை என்ற நோயும் தாக்கி வருகிறது. மாவட்டத்தில் நேற்று மேலும் 8 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், 2 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களில் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 5 பேர் ஆவர். மேலும் மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய்க்கு 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்