நொய்யல்
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே கட்டி பாளையம் பகுதியில் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் நேற்று கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சுதமதி தலைமையிலான மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சளி மாதிரி எடுத்து, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முகாமில் தவுட்டுப்பாளையம், கட்டி பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.