கொரோனாவுக்கு மூதாட்டி பலி

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-06-12 19:17 GMT
அரியலூர்:

பலி எண்ணிக்கை உயர்வு
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 98 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 13,528 ஆக உயர்ந்துள்ளது. இதில் 169 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 70 வயதுடைய மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணக்கை 170 ஆக உயர்ந்துள்ளது.
1,102 பேருக்கு சிகிச்சை
மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 12,256 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 278 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 1,102 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் மாவட்டத்தில் 1,171 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. மாவட்டத்தில் நேற்று 3,966 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 150 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்