கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Update: 2021-06-12 19:17 GMT
பெரம்பலூர்:

3 பேர் பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 29 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 22 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 18 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 15 பேரும் என மொத்தம் 84 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 10,314 ஆக உயர்ந்துள்ளது.
இதில் ஏற்கனவே 151 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடி ராமமூர்த்தி நகரை சேர்ந்த 36 வயதுடைய ஆண் ஒருவரும், பெரம்பலூர் தாலுகா ஆலம்பாடியை சேர்ந்த 38 வயதுடைய ஆண் ஒருவரும், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வேப்பந்தட்டை தாலுகா கிருஷ்ணாபுரம் கலைஞர் காலனியை சேர்ந்த 47 வயதுடைய ஆண் ஒருவரும் என மொத்தம் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது.
9,127 பேர் வீடு திரும்பியுள்ளனர்
மருத்துவமனைகளில் இருந்து இதுவரை 9,127 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 230 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 1,032 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 643 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியது உள்ளது.

மேலும் செய்திகள்