உடையார்பாளையம், தா.பழூர் பகுதிகளில் மழை

உடையார்பாளையம், தா.பழூர் பகுதிகளில் மழை பெய்தது.

Update: 2021-06-12 19:17 GMT
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் நேற்று வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. பின்னர் வானில் கருமேகம் சூழ்ந்து காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இதில் உடையார்பாளையம் மற்றும் சுற்றியுள்ள கழுமங்கலம், கச்சிபெருமாள், துலாரங்குறிச்சி, சோழங்குறிச்சி, அழிசிகுடி, பருக்கள், தத்தனூர், மனகதி, வெண்மான் கொண்டான், ஆதிச்சனூர், சுத்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் மாலை 5 மணி அளவில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. இதையடுத்து லேசான காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இடி, மின்னலுடன் 2 மணி நேரம் மிதமான மழை பெய்தது.

மேலும் செய்திகள்