கொல்லிமலையில் சாராயம் கடத்திய 6 பேர் கைது

கொல்லிமலையில் சாராயம் கடத்திய 6 பேர் கைது

Update: 2021-06-12 20:40 GMT
சேந்தமங்கலம்:
கொல்லிமலையில் உள்ள தேனூர்பட்டி பஸ் நிறுத்தத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் குமார் தலைமையிலான போலீசார் நேற்று திடீர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 41), விமல்ராஜ் (29) ஆகிய இருவரும் ஒரு காரில் தலா 3 லிட்டர் சாராயத்தை கடத்தி கொண்டு வந்தனர். அதை கைப்பற்றிய போலீசார் அதே இடத்தில் கீழே கொட்டி அழித்ததுடன் 2 பேரையும் கைது செய்தனர். 
அதேபோல அப்பகுதியை சேர்ந்த சின்னையன் (67), வெள்ளையன் (32), ராஜ்குமார் (34), சேவி (36) ஆகியோர் சாராயம் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 12 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அதே இடத்தில் அழித்தனர்.

மேலும் செய்திகள்