கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் பல்லகச்சேரி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயத்தை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த பழைய பல்லகச்சேரி பகுதியைச் சேர்ந்த ஏழுமலை(வயது 50) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 11 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.