சுமை தூக்கும் தொழிலாளியை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு

சுமை தூக்கும் தொழிலாளியை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

Update: 2021-06-14 21:59 GMT
திருச்சி
திருச்சி பாலக்கரை காஜாபேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 48). சுமை தூக்கும் தொழிலாளி. சம்பவத்தன்று இவருடன் பணியாற்றும் சக தொழிலாளிகளான காளி என்கின்ற காளிமுத்து (28), பகவதிராஜ் (23), குமார் (22) ஆகியோர் மது அருந்தி விட்டு மோகன்ராஜை சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பாலக்கரை போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்