கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 242 பேர் பாதிப்பு வாலிபர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 242 பேர் பாதிப்பு வாலிபர் உயிரிழப்பு

Update: 2021-06-15 01:18 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.
கொரோனா
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார். 
இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 242 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 468 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். ஒருவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். 
சிகிச்சை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 37 ஆயிரத்து 404 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 35 ஆயிரத்து 20 பேர் குணமடைந்துள்ளனர். 2 ஆயிரத்து 122 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 262 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்