பந்தலூர்
பந்தலூர் அருகே தேவாலா அட்டி புதியகுன்னு பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு போலீசார் விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது குழி தோண்டி புதைக்கப்பட்டு இருந்த 40 லிட்டர் சாராய ஊறல், 1 லிட்டர் சாராயம் மற்றும் அதனை காய்ச்ச பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த புஸ்பகாந்த்(வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.