மோட்டார் சைக்கிள் திருட்டு

சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.

Update: 2021-06-17 19:39 GMT
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி மெயின் ரோட்டை சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி காளியம்மாள் (வயது 42). இவர் தனது வீட்டருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோது மர்ம நபர்கள் மோட்டார்சைக்கிளை திருடிச் சென்று விட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சின்னகோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்