கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் இயங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. சார்பில் கட்சியின் நிர்வாகிகள் தங்கள் வீடுகளின் முன்பாக கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். காரைக்குடியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப்பொதுச் செயலாளர் திருஞானம் தலைமையில் அதன் நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.