வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-06-19 18:59 GMT
நச்சலூர்
கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள முதலைப்பட்டி, பாளையத்தான் தோட்டம் பகுதியை சேர்ந்த வர் அண்ணாவி. இவரது மகன் ராஜ்குமார் (வயது 32). இவர் நாமக்கலில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இதையடுத்து கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். ராஜ்குமாருக்கு ரத்த புற்று நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பல மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. 
இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராஜ்குமார் கடந்த 18-ந்தேதி வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அண்ணாவி கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்