விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிவகங்கை,
ஆா்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மணியம்மா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் கந்தசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வீரையா, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் உமாநாத், உள்பட பலர் கலந்து கொண்டனர்.