200 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஆலங்குளம் அருகே நடைபெற்ற முகாமில் 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Update: 2021-06-21 19:54 GMT
ஆலங்குளம், 
ஆலங்குளம் அருகே உள்ள சுண்டங்குளம் பள்ளியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் ஏ.லட்சுமிபுரம் ஊராட்சி தலைவர் மகேஷ்வரி மகேஷ்வரன் தலைமையில் நடைபெற்றது. முகாமிற்கு டாக்டர் செந்தட்டி காளை, சுகாதார ஆய்வாளர் மதியரசு ஆகியோர் 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். ஆலங்குளம் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய ம.தி.மு.க.செயலாளர் ரவிசங்கர், பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் பலர் முகாமில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்