திருச்சியில் கொரோனாவுக்கு 12 பேர் பலி

திருச்சியில் கொரோனாவுக்கு 12 பேர் பலியாகினர்.

Update: 2021-06-21 20:22 GMT
திருச்சி
திருச்சி
251 பேருக்கு தொற்று
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் குணமடைந்து வீடு திரும்பி வருகிறார்கள்.  இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 251 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் தனிமை முகாம்களில சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67 ஆயிரத்து 390 ஆக அதிகரித்தது.
12 பேர் பலி
 இந்தநிலையில் அரசு மருத்துவமனை மற்றும் தனிமை முகாம்களிலிருந்து குணமடைந்த 884 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர். ஆனால் திருச்சியில் நேற்று ஒரேநாளில் மட்டும் கொரோனாவுக்கு 12 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 858 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்