பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-22 19:48 GMT
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கோரியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தவசீலன். இவரது மனைவி செந்தமிழ்ச்செல்வி(வயது 37). இவர் தனது வீட்டிற்கு குடிநீர் குழாய் இணைப்பு கொடுப்பதற்காக குழி வெட்டியபோது, அவரை அதே பகுதியை சேர்ந்த ராஜாங்கத்தின் மகன் செந்தில்குமார்(25) தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இது குறித்து செந்தமிழ்ச்செல்வி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்