மேட்டுப்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் மாவட்ட வருவாய் அதிகாரி திடீர் ஆய்வு

மேட்டுப்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் மாவட்ட வருவாய் அதிகாரி திடீர் ஆய்வு

Update: 2021-06-23 20:01 GMT
மேட்டுப்பாளையம்

கொரோனா பரவல் காரணமாக மேட்டுப்பாளையம் காய்கறி மார்க் கெட் மூடப்பட்டது. பின்னர் அந்த மார்க்கெட் அன்னூர் ரோட்டில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் செயல்பட்டது. அங்கு போதிய வசதி இல்லாததால், கடந்த 21-ந் தேதி மீண்டும் திறக்கப்பட்டன. 

இந்த நிலையில் கோவை மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரை முருகன் திடீரென்று மேட்டுப்பாளையம் வந்தார். பின்னர் அவர் காய்கறி மற்றும் உருளைக்கிழங்கு மண்டிகளில் திடீர் ஆய்வு மேற் கொண்டார். 

அப்போது அவர், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், மார்க்கெட்டில் வேலை செய்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும் என்றார். 

இந்த ஆய்வின்போது கோவை வடக்கு ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன், தாசில்தார் ஷர்மிளா, மண்டல துணை தாசில்தார் பாலமுருகன் நகராட்சி ஆணையர் கவிதா, காரமடை வட்டார மருத்துவ அதிகாரி சுதாகர், சுகாதார மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். 

--------------

மேலும் செய்திகள்