திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-06-29 06:06 GMT
பூந்தமல்லி,

சென்னை கோயம்பேடு, ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 25). ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜெயலட்சுமி (19) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சந்திரசேகருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு குடித்து விட்டு வீட்டுக்கு வந்த சந்திரசேகர், மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் விரக்தி அடைந்த ஜெயலட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஜெயலட்சுமிக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்