சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-29 17:07 GMT
திருச்செந்தூர்:
காயல்பட்டினம் அக்பர்ஷா தெருவை சேர்ந்த முகமது அலி மகன் முத்துவாப்பா (வயது 25). இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, முத்துவாப்பாவை கைது செய்தார்.


மேலும் செய்திகள்