தொண்டி,
திருவாடானை தாலுகா தேளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே அரசு அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் தொண்டி போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மணல் அள்ளி கொண்டிருந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக டிப்பர் லாரி உரிமையாளர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் காடாங்குடி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மகன் முருகன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.