சாய்பாபா காலனி கோவிலில் சிறப்பு வழிபாடு
சாய்பாபா காலனி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது
சாத்தூர்
சாத்தூர் அருகே சாய்பாபா காலனி கோவிலில் வியாழக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி பால், பன்னீர், தேன், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம், மஞ்சள், இளநீர் போன்ற திரவியங்களால் சாய்பாபாவுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.