நாடக நடிகர்களுக்கு நிவாரண உதவி

நாடக நடிகர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

Update: 2021-07-01 18:57 GMT
கரூர்
கரூர் மாவட்ட நாடக நடிகர்கள் சங்கம் சார்பில் நாடக நடிகர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு நடிகர் சங்க தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஈட்டி கணேசன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராதகிருஷ்ணன் கலந்து கொண்டு, 90 நாடக கலைஞர்களுக்கு தலா 5 கிலோ அரிசி நிவாரண உதவியாக வழங்கினார். இதில், நாடக நடிகர்கள், இசை கலைஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாரியம்மன் அறகட்டளை மதன் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்