கரூர்
கரூர் வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாங்கபாளையம் அருகே உள்ள ஓட்டை பிள்ளையார் கோவில் பின்புறம் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த வெங்கமேட்டை சேர்ந்த சுரேஷ் (வயது 38), ஜீவா (36) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.