விபத்தில் காயம் அடைந்த பெண் சாவு

நெல்லையில் விபத்தில் காயம் அடைந்த பெண் இறந்தார்.

Update: 2021-07-02 20:06 GMT
நெல்லை:
நெல்லை கொங்கந்தான்பாறையை சேர்ந்தவர் மரியசெல்வம். இவருடைய மனைவி மரிய லூர்து (வயது 58). இவர் சம்பவத்தன்று தனது மகன் ஆரோக்கிய ஏசுவடியானுடன், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிள் டக்கரம்மாள்புரம் பகுதியில் சென்றபோது திடீரென 2 பேரும் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதில் மரிய லூர்து பலத்த காயமடைந்தார். ஆரோக்கிய ஏசுவடியானுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மரிய லூர்து நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்