முன்விரோதத்தில் தகராறு; 2 பேர் கைது

முன்விரோதத்தால் தகராறு ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-07-02 20:12 GMT
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா புதுகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ரவி(வயது 48). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்ற கந்தன் (44) என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களுக்கு இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. இதில் அவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்