விஷம் குடித்து வியாபாரி தற்கொலை

வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் விஷம் குடித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-02 20:12 GMT
குன்னம்:
குன்னம் அருகே உள்ள அணைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 56). மக்காச்சோளம் வாங்கி, விற்கும் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த செல்வராஜ் நேற்று முன்தினம் கொளக்காநத்ததில் உள்ள தனது கடையில் வைத்து பூச்சி மருந்தை(விஷம்) குடித்தார். இது பற்றி தகவல் அறிந்த உறவினர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில்  இருந்த அவரை மீட்டு, கொளக்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து செல்வராஜின் மனைவி மீனாம்பாள் கொடுத்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்