புதிதாக 66 பேருக்கு கொரோனா தொற்று

புதிதாக 66 பேருக்கு கொரோனா தொற்று

Update: 2021-07-03 17:13 GMT
புதுக்கோட்டை, ஜூலை.4-
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து188 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 81 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து239 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 620 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 329 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்