திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 102 பேர் பாதிப்பு - 3 பேர் சாவு

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 102 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று கொரோனா தொற்றால் 3 பேர் இறந்துள்ளனர்.

Update: 2021-07-04 02:42 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றால் 102 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 11 ஆயிரத்து 336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 701 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 922 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1,713 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று மாவட்டம் முழுவதும் 3 பேர் இறந்துள்ளனர்.

மேலும் செய்திகள்