கஞ்சா விற்ற வாலிபர் கைது

நெல்லையில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-04 20:05 GMT
நெல்லை:
பாளையங்கோட்டையை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 20). இவர் பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே கஞ்சா விற்று கொண்டிருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 25 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்