டிரைவர் திடீர் சாவு

நெல்லையில் டிரைவர் திடீரென்று இறந்தார்.

Update: 2021-07-06 19:15 GMT
நெல்லை:

நெல்லை பேட்டையை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 36). டிரைவரான இவர் நேற்று முன்தினம் நெல்லை நயினார்குளம் மார்க்கெட் பகுதியில் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்