கோட்டூர்புரத்தில் துணிகரம் மளிகை கடைக்காரர் வீட்டில் 50 பவுன் நகை-பணம் திருட்டு

கோட்டூர்புரத்தில் துணிகரம் மளிகை கடைக்காரர் வீட்டில் 50 பவுன் நகை-பணம் திருட்டு.

Update: 2021-07-07 02:59 GMT
சென்னை,

சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகரைச் சேர்ந்தவர் இக்பால் (வயது 40). இவர் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு இவர் குடும்பத்துடன் வெளியில் சென்று விட்டார். நேற்று காலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டுக்குள் கதவை உடைத்து கொள்ளையர்கள் புகுந்திருப்பது தெரியவந்தது. வீட்டில் பீரோவில் வைத்திருந்த 50 பவுன் தங்கநகைகள் மற்றும் ரூ.1½ லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையர்கள் திருடிச்சென்று விட்டனர். இது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்