சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2021-07-07 20:07 GMT
ராஜபாளையம், 
மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. 
ராஜபாளையம் 
ராஜபாளையம் அருகே வாழவந்தாள்புரம் கிராமத்தில் மன்மத ராஜலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. 
 முன்னதாக நந்திக்கு மஞ்சள், தேன், இளநீர், பால், தயிர் உள்பட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மாயூரநாதர் சாமி கோவில், அருணாச்சலேஸ்வரர் கோவில், குருசாமி கோவில், தெற்கு வெங்கநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோவில், சோழபுரம் விக்கிரம பாண்டீஸ்வரர் கோவில், பறவை அன்னம் காத்தருளிய சாமி உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சேத்தூர் 
அதேபோல சேத்தூர் திருக்கண்ஸ்வரர் கோவில், தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி, சொக்கநாதன்புத்தூர் தவ நந்தீஸ்வரர் ஆகிய கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து நந்தி பெருமான் மற்றும் சுவாமி சப்பரத்தில் கோவிலை வலம் வந்தனர். இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  
 விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவிலில் உள்ள நந்தீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. 

மேலும் செய்திகள்