பிறந்தநாள் கொண்டாட இருந்த வாலிபர், நண்பர்களை ஆந்திர போலீசார் அழைத்து சென்றதால் பரபரப்பு
வாலிபர், நண்பர்களை ஆந்திர போலீசார் அழைத்து சென்றதால் பரபரப்பு
திருவலம்
பொன்னை அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் பிறந்த நாள் கொண்டாட அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்ததாக தெரிகிறது.
நேற்று முன்தினம் மாலை ஆந்திர மாநில போலீசார் பொன்னைக்கு வந்து, பிறந்த நாள் கொண்டாட இருந்த வாலிபரையும், அவரது நண்பர்கள் சிலரையும் வழக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.