திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 85 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 85 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2021-07-11 06:36 GMT
இதுவரையில் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 11 ஆயிரத்து 982 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 365 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 895 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1,722 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று மாவட்டம் முழுவதும் ஒருவர் இறந்து உள்ளார்.

மேலும் செய்திகள்