திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ரோஜா குடும்பத்துடன் சாமி தரிசனம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சுப்ரமணியசாமி கோவிலுக்கு நடிகையும், ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜா நேற்று மாலை சாமி தரிசனம் செய்ய வந்தார்.

Update: 2021-07-11 06:37 GMT
முன்னதாக திருப்பதி மலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய சென்ற அவர் அங்கு சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு நேராக திருத்தணி சுப்பிரமணியசாமி மலைக் கோவிலுக்கு வந்தார். அவருடன் திரைப்பட இயக்குனரும் அவரது கணவருமான ஆர்.கே. செல்வமணி, மகள் அஞ்சுமாலிகா, மகன் கிருஷ்ணா கவுசிக், மற்றும் உறவினர்கள் ஆகியோர் வந்திருந்தனர்,

சாமி தரிசனத்தின் போது, அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பூமாலை, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் கோவிலை விட்டு வெளியே வந்த அவருடன் ரசிகர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர். அவர் வருகையையொட்டி, ஆந்திர மாநில போலீசார் பாதுகாப்புக்கு உடன் வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்